Thursday, January 5, 2012

அடுக்கு மாடியில் ஓர் சக்கரை...



உன் உடம்பின் இயலாமையை
உனக்குள் மறைத்துக் கொண்டு
என்னை திருப்திப் படுத்த
உள்ளூர உன்னை மீறிய
வலிகளை தாங்கிக் கொண்டாய்...


தலையணையை
அணைத்துக் கொண்டு
கட்டிலில் சுதந்திரமாய்
ஓய்வெடுக்க வேண்டிய நீ
உன் தலை வலியை
எங்கோ காற்றில் மேய விட்டு
புதுப் பெண்ணாய்
என்னை ஆசுவாசப்படுத்தினாய்...


பல நேரமாய்
ஒட்டியிருந்த என்னை
குத்திக் குதற
சில நேரம் நீ நினைத்திருக்கலாம்
அதையும் அடக்கி
உன்  மென்மையான
புன்னகையை மலர்ந்தாய்
அது ஆயிரம் இதயங்களையும் தாண்டி
காதல் தரும் புன்னகை...


வெறுங் கையுடன்
உன் அரண்மனைக்குள் வந்த போது
விருந்தாளியாய் கவனித்தாய்
உன் பெரு மனதால்
நான் வெட்கித்துப் போனேன்...


அங்கு வந்திருக்கக் கூடாது
உனக்கு தொந்தரவு தந்திருக்கக் கூடாது
உன் சக்தியை மீறிய இயலாமையால்
வாடி நின்ற உன் முகம் பார்த்து
என் மனம் அழுதது
உனக்கு உரிமையில்லாத நான்
உன் தலை முடியை கோதி
எப்படி ஆறுதல் படுத்துவேன்

இருந்தாலும்
உன் நலவுக்காய்
என் எல்லாப் பிரார்த்தனைகளுடனும்
உன்னிடமிருந்து விடைபெற்றேன்...





No comments:

Post a Comment