Monday, May 16, 2011

களவு போகும் ஞபாகம்...


வானம் கறுத்து
பயமுறுத்தும் இரவிலும்
நாய் குரைத்து பேய்கள் ஊளையிடும் பொழுதிலும்
நீ எனக்குள்
சாரலாய், சாமரமாய்,சில நேரம் தென்றலாய் வருடுகிறாய்..
உன் ஞாபகங்களால் என்னை போர்த்திக் கொள்கிறாய்.......

விழி திறந்து....
உன்னை தேடுவேன்.....
எட்டாத தூரத்தில் நீ இருப்பாய்...
அடையமுடியா ஒன்றுக்காய் கொட்டாவி விட்டதாய்
ஏமாந்து போகும் என் மனசு....
பக்கத்தில் நீ இருப்பாயென காத்திருந்து...
நொந்து கொள்ளும் என் விழி......



நொந்து நகரும் நாட்களில்
நெஞ்சோரம் வந்து ஆறுதல்  சொல்லும்
பக்குவமான உன் வார்த்தைகள்..
சில நேரம்..
வெறுப்போடு கழியும் பொழுதுகளை
விருப்பமுள்ளதாக்கும்  உனதான காதல்....
தூரமாகிப் போன நமது காதலை
நேற்று ஞாபகப்படுத்தினாய்
அப்போது...
உன் வார்த்தைகள் பனித்துளியாய்
என்னை நனைத்தன....
அது
அழகாய் மிக அழகாய் என்னை பரவசப்படுத்தின...


இப்படியெல்லாம் இருக்கும் நீ..
நினைவுகளோடு மட்டும்தான்
என்னோடுயிருக்கிறாய்....
என் நினைவின் சொந்தக்காரியே..!
இரவும் பகலும்
மாறி மாறி
என்னை வேட்டையாடிக் கொண்டிருப்பதை அறிவாயா..?