Sunday, August 14, 2011

காத்திருப்பு.........


ஒரு கமராக் காரனைப் போல்
உன்னை பதிவு செய்து வைத்துள்ளேன்..
என் சேமிப்பு பெட்டகம் முழுவதும்
நீதானிருக்கிறாய்........

ஒரு வாடகைக் கமராக்காரனைப் போல்
ஒற்றைக் கண்ணால்
உன் அழகை ரசிப்பதற்காய்
வழி நெடுகிலும் விழி வைத்து காத்திருக்கிறேன்
நீ தாமதிக்கும் அந்த பொழுதுகளில்
என் விழிகள் விம்முகின்றன..
உனக்காய் காத்திருந்த வழிகள் இருளாகிப் போகின்றன........

என் இதய அறைகளுக்குள்
குடியேறிய உன்னை
தங்கத் தட்டில்  தாலாட்டி மகிழ
ஒரு நகைக் கடையை  தேடித் திரிகிறேன்..
அந்த தங்கக் கடை தூரத்தில் வாடகைக்காய் காத்திருக்கிறது..
அந்த இட வெளிக்குள் என் மனக் கோட்டையை தகர்ப்பாயா..
அல்லது என்னை மறந்து
இன்னுமொருவரின் இல்லறத்தை
உன் தங்க மனதால் அலங்கரிப்பாயா.....?

என் பெட்டிகள் முழுவதும்
பட்டுச் சேலைகளால் நிரம்பியுள்ளன
பூவாய் இருக்கும் உன்னை
போர்த்திக் கொள்ள வண்ண வண்ண சேலைகள் காத்திருக்கின்றன
சோலை வனமாய் மணம் பரப்பும் உன்னை
ரசிப்பதற்காய் நான் வண்டாய் காத்திருப்பேன்.
இப்படியெல்லாம் காத்திருக்கும் என்னை
நீ பாலை வனமாய் மாறி
சில நேரம் சுட்டெரிப்பாயோ
என மனம் பதை பதைப்பதுமுண்டு......

உன்னை என் மனதுக்குள் பதிவு செய்து
ஒரு வாடகை கமராக் காரனைப் போல் காத்திருக்கிறேன்..
நீ தாமதிக்கும் அந்த பொழுதுகளில்
என் விழிகள் விம்முகின்றன
தற்காலிகமாய் வாடகைக் கமராக்காரனாய் மாறியுள்ள என்னை
நிரந்தர வாடகை கமராக்காரனாய் 
வீதியெல்லாம் அலைய வைப்பாயோ.....?





Monday, August 8, 2011

யார் விட்ட தவறு........

இறை இல்லம்
மனிதர்களால் நிரம்பி வழிகிறது..
அழுதழுது அவரவர் பாவங்களை கழுவிக் கொண்டிருக்கின்றனர்...
அதன் வாயிலில்..,
வறுமையின் கண்ணீரோடு
ஒரு இளம் மாது நிற்கிறாள்........

அறிமுகமில்லாத
அத்தனை பேரிடமும்
தன்னை அடையாளப்படுத்தி
கையை நீட்டி கெஞ்சுகிறாள் அந்த இளம் மாது...
அவள் இடுப்பில் ஒரு கைக் குழந்தை
அழுது கொண்டிருக்கிறது........

சில சில்லறைகளுக்காக
வருவோர்,போவோர் எல்லோரையும்
பரிதாபமாய் பார்க்கிறாள்...
சிலர் கொடுக்கின்றனர்...
இன்னும் சிலர் பாவாய் பார்த்துவிட்டு போகின்றனர்
வேறு சிலர் தூரத்தில் நின்று விமர்சிக்கின்றனர்...
ஆனால் அவள் தன்மானம் இழந்து
கெஞ்சி கெஞ்சி கையை  நீட்டுகிறாள்.....

சுமைகளை
சுமக்க முடியாத அந்த இளம் பெண்
ஆயிரம் சுமைகளை சுமந்து கொண்டு
இறை இல்லத்தின் வாசற்படியோரம்
கை நீட்டி காசு கேட்கிறாள்...
ஆயிரமாயிரம் சுமைகளை
அவள் மீது சுமத்தியது யார்...?

தன் தோழிகளுடன்
இனிமையாய் பொழுதைக் கழிக்க வேண்டியவள்
பள்ளிக்கூடம் சென்று பாடங்களை படிக்க வேண்டியவள்
தனது காய்ந்து போயிருக்கும்
குடலை ஈரமாக்குவதற்கும்
தன் தோழில் சுமந்திருக்கும் குழந்தைக்கு
பால் கொடுக்க தன் மார்பில் பால் சுரக்கவில்லை
நல்லா சாப்பிட்டு நாளாச்சு என்றும்
கெஞ்சி கெஞ்சி காசு கேட்கிறாள்
அந்த அழகான இளம் பெண்....

அந்த இளம் பெண் அழகாயிருக்கிறாள்
யார் அவளை பிச்சைக் காரியாக்கியது..
சிலர் அவளிடம் போய் விசாரிக்கின்றனர்...
இன்னும் சிலர் தன் இச்சைகளைப் போக்க
அவளை அணுகுகின்றனர்..
வேறு சிலர் விபச்சாரியாக்க முயல்கின்றனர்.....


இல்லாத அவளுக்கு
உள்ளவர்கள் கொடுத்திருந்தால்
இல்லத்திலே தங்கியிருந்திருப்பாள்..
இல்லாத போது இவளைப் போல்
பல சுமையாக்களும்,பாத்திமாக்களும்
இறை இல்லம் என்ன..?
வீதி,வீதியாய் அலைவதை தவிர்க்க முடியாது..
சில நேரம், சில நோட்டுக்களுக்காய்
தன் கற்பையும் வாடகைக்கு விடக்கூடும்......


அந்நிய ஆடவரிடமிருந்து
மறைந்து வாழ வேண்டிய நம் சமுதாயத்தின் கண்
அறிமுகமில்லாதவர்களிடம்
கெஞ்சி கெஞ்சி காசு கேட்கிறாள்
இப்போது அவள்
பாவம்  பிச்சைக்காரியாய் அடையாளமாகிறாள்..
வாழ்வதற்காய் அவள்
எத்தனை காமுகர்களிடம் போராடப் போகிறாளோ....?


Sunday, August 7, 2011

எப்படியானாலும்...நீ...



உன்னை சந்திப்பதற்கு
உன் தெருவுக்கு வருவேன்
நீ வரவேமாட்டாய்...
உன்னைக்காணாத அந்த நிமிடம்
தவிப்புக்களால் கரைந்துபோகும்....
இப்போது என்னை பார்க்க தினமும் தவிக்கிறாய்.
முன்னரைப்போல்
உன் தெருவுக்கு இப்போது என்னால் வரமுடியாது....
காலமும்,என் தொழிழும் உன்னை, என்னிடமிருந்து
பிரித்து வைத்திருக்கிறது.........



உன்னோடு பேசமுடியாவிட்டாலும்...,
உனதான ஞாபகங்கள்
என் மனசுக்குள் மௌனமாயிருக்கிறது...
உன் மௌனம் என்னை கவிதை எழுத வைத்தது..
என் மௌனம் உன்னை தனிமைப்படுத்தியது..
நான் உன் தெருவுக்கு வராவிட்டாலும்
உன்னோடு பேசமுடியாவிட்டாலும்
நீ உனக்கான பாதையிலும்
நான் எனக்கான பாதையிலும்
மௌனமாய் பயணிப்போம்......


உன்னிடம் பகிர
என் மனசில் ஆயிரமாயிரம்
கதைகளிருக்கிறது.....
அவை செல்லாக்காசாகிப்போகுமோ என்று
என் மனசு பதை பதைப்பதுமுண்டு......
நீ அந்தக் கரையிலும்
நான் இந்தக் கரையிலும் நிற்கிறோம்..
ஒருவரையொருவர் கடக்க முடியாமலும் தவிக்கிறோம்....




நான் உன் தெருவில் அலைந்த போது
என் பெறுமதி உனக்கு தெரியவில்லை
இப்போது என்னை பலர் பாராட்டும் போது
நான் உன் பக்கம் இருக்க வேண்டுமென விரும்புகிறாய்..
உன் பக்கம் என்னால் வரமுடியாவிட்டாலும்
உன்னை அவ்வப்போது நினைத்துக்கொண்டுதானிருக்கிறேன்......