Tuesday, June 5, 2012

என் வசந்தம்...



இளவரசியும்
உன்னிடம் தோற்றுப் போவாள்
என் இதய அரசி நீ என்பதனால்..

என் முற்றதத்து பூக்கள்
மலரும் மகிழ்ச்சியை விட
உன் புன்னகை
என் சந்தோஷ விடியலை எழுதுகிறது..



பகட்டுக்காய்
வேசம் போட்டு பாசம் வைக்கும்
மனிதர்களுக்கு மத்தியில்
உன் நிஜ அன்பு
நிலவின் ஒளியாய் என்னை நனைக்கிறது..



முகச்சாயங்களில்
அழகு ராணி பட்டம் வாங்கும்
மேக்கப் ராணிகளுக்கிடையில்
நீ இயற்கையாய் வந்து
என் மனதை இழுத்தெடுக்கிறாய்
உன் அழகு....அது கொள்ளை அழகு..



உன் காந்தப் பார்வையால்
ஊசியாய் ஒட்டிக் கொள்கிறேன்
உன் அழகை ரசிக்க முடியாமலும்
என் பார்வையை திருப்ப முடியாமலும்
உன்னிடம் தோற்றுப் போகின்றேன்..



சில நேரம்
மனச் சுமைகளால்
வியர்த்துக் கொட்டும் என் மேனியை
சாமரம் வீசும் உன் வார்த்தைகளால்
குளிர்மைப் படுத்துவாய்
அப்போது..என் வீட்டு மின் விசிரியை வென்று நிற்பாய்..