Wednesday, February 29, 2012

நீ வந்துதான் போனாய்...


ஆர்ப்பாட்டமில்லாமல்
நீ வந்து போனாய்
உன் நினைவுகள்
கடல் அலையாய்
எனக்குள் அடித்துக் கொண்டிருப்பதை
உன் மனமறியுமா..?


இரவு
பொழுதை கவ்விக் கொண்ட நேரத்தில்
உனதான வருகை
என்னை முழுவதுமாய் ரசிக்க வைத்தது..


உடல் களைப்புற்ற தருணத்திலும்
உன் அழகு மங்கவில்லை
நீ புன்னகையை விரித்த போது
நான் விரல் கடித்து
 விரல் புன்னாய்ப் போனதை
உனக்கு எப்படிச் சொல்வேன்..


இரவுகளில்
நிலாவையும்,நட்சத்திரங்களையும்
ரசிகக்கத் தெரிந்த எனக்கு
இப்போதுகளில்
உன்னை மட்டும்தான் ரசிக்க முடிகிறது
ஒவ்வொரு இரவுகளிலும்..


நீ தொலை தூரமாகியும்
தூர்ந்து போகாத உன் வார்த்தைகளும்
வந்து போன கால் தடங்களும்
உன் புன்னகையும்
நினைவுகளால் என்னை ஆசுவாசப்படுத்துகிறது..