Saturday, March 17, 2012

மொழியின் மௌனம்...



உன்னால் மட்டும்தான் முடியும்
என் வார்த்தைகளை ஊமையாக்க
மொழிகளை வர்ணம் தீட்டி
ஊரறிய பேசும் நான்
நீ வந்ததும் மௌனமாகிறேன்...

உணர்வுகளை மொழி பெயர்த்து
அர்த்தங்களை வகுக்கும் உன்னால்
என் மௌனங்களை
ஏன் புரிந்து கொள்ள முடியாமல் போனாய்...

காதல் கதைகளை
காது நிறைய கேட்கும் என்னால்
என் காதலைத்தானே
 சொல்ல முடியாமல் போகிறது
எத்தனைதான் வீராப்பு காட்டினாலும்
உன்னிடம் நான் வெறும் காகிதம்தான்...

நகைச்சுவை நடிகனைப் போல்
குறும்புத்தனமாய் பேசித்திரியும்
என் வார்த்தைகள்
உன்னிடம் மௌனமாகவே அமர்கிறது
நீயோ கல்யாண வீட்டைப் போல்
கலகலப்பாய்த்தான் இருக்கிறாய்
என்ன செய்ய..
ஓர் அழையா விருந்தாளியைப் போல்
உன் அழகை ரசிப்பதுதான்
இப்போதுகளில் என் தலைவிதியாச்சு...