Sunday, August 7, 2011

எப்படியானாலும்...நீ...



உன்னை சந்திப்பதற்கு
உன் தெருவுக்கு வருவேன்
நீ வரவேமாட்டாய்...
உன்னைக்காணாத அந்த நிமிடம்
தவிப்புக்களால் கரைந்துபோகும்....
இப்போது என்னை பார்க்க தினமும் தவிக்கிறாய்.
முன்னரைப்போல்
உன் தெருவுக்கு இப்போது என்னால் வரமுடியாது....
காலமும்,என் தொழிழும் உன்னை, என்னிடமிருந்து
பிரித்து வைத்திருக்கிறது.........



உன்னோடு பேசமுடியாவிட்டாலும்...,
உனதான ஞாபகங்கள்
என் மனசுக்குள் மௌனமாயிருக்கிறது...
உன் மௌனம் என்னை கவிதை எழுத வைத்தது..
என் மௌனம் உன்னை தனிமைப்படுத்தியது..
நான் உன் தெருவுக்கு வராவிட்டாலும்
உன்னோடு பேசமுடியாவிட்டாலும்
நீ உனக்கான பாதையிலும்
நான் எனக்கான பாதையிலும்
மௌனமாய் பயணிப்போம்......


உன்னிடம் பகிர
என் மனசில் ஆயிரமாயிரம்
கதைகளிருக்கிறது.....
அவை செல்லாக்காசாகிப்போகுமோ என்று
என் மனசு பதை பதைப்பதுமுண்டு......
நீ அந்தக் கரையிலும்
நான் இந்தக் கரையிலும் நிற்கிறோம்..
ஒருவரையொருவர் கடக்க முடியாமலும் தவிக்கிறோம்....




நான் உன் தெருவில் அலைந்த போது
என் பெறுமதி உனக்கு தெரியவில்லை
இப்போது என்னை பலர் பாராட்டும் போது
நான் உன் பக்கம் இருக்க வேண்டுமென விரும்புகிறாய்..
உன் பக்கம் என்னால் வரமுடியாவிட்டாலும்
உன்னை அவ்வப்போது நினைத்துக்கொண்டுதானிருக்கிறேன்......



No comments:

Post a Comment