Monday, August 8, 2011

யார் விட்ட தவறு........

இறை இல்லம்
மனிதர்களால் நிரம்பி வழிகிறது..
அழுதழுது அவரவர் பாவங்களை கழுவிக் கொண்டிருக்கின்றனர்...
அதன் வாயிலில்..,
வறுமையின் கண்ணீரோடு
ஒரு இளம் மாது நிற்கிறாள்........

அறிமுகமில்லாத
அத்தனை பேரிடமும்
தன்னை அடையாளப்படுத்தி
கையை நீட்டி கெஞ்சுகிறாள் அந்த இளம் மாது...
அவள் இடுப்பில் ஒரு கைக் குழந்தை
அழுது கொண்டிருக்கிறது........

சில சில்லறைகளுக்காக
வருவோர்,போவோர் எல்லோரையும்
பரிதாபமாய் பார்க்கிறாள்...
சிலர் கொடுக்கின்றனர்...
இன்னும் சிலர் பாவாய் பார்த்துவிட்டு போகின்றனர்
வேறு சிலர் தூரத்தில் நின்று விமர்சிக்கின்றனர்...
ஆனால் அவள் தன்மானம் இழந்து
கெஞ்சி கெஞ்சி கையை  நீட்டுகிறாள்.....

சுமைகளை
சுமக்க முடியாத அந்த இளம் பெண்
ஆயிரம் சுமைகளை சுமந்து கொண்டு
இறை இல்லத்தின் வாசற்படியோரம்
கை நீட்டி காசு கேட்கிறாள்...
ஆயிரமாயிரம் சுமைகளை
அவள் மீது சுமத்தியது யார்...?

தன் தோழிகளுடன்
இனிமையாய் பொழுதைக் கழிக்க வேண்டியவள்
பள்ளிக்கூடம் சென்று பாடங்களை படிக்க வேண்டியவள்
தனது காய்ந்து போயிருக்கும்
குடலை ஈரமாக்குவதற்கும்
தன் தோழில் சுமந்திருக்கும் குழந்தைக்கு
பால் கொடுக்க தன் மார்பில் பால் சுரக்கவில்லை
நல்லா சாப்பிட்டு நாளாச்சு என்றும்
கெஞ்சி கெஞ்சி காசு கேட்கிறாள்
அந்த அழகான இளம் பெண்....

அந்த இளம் பெண் அழகாயிருக்கிறாள்
யார் அவளை பிச்சைக் காரியாக்கியது..
சிலர் அவளிடம் போய் விசாரிக்கின்றனர்...
இன்னும் சிலர் தன் இச்சைகளைப் போக்க
அவளை அணுகுகின்றனர்..
வேறு சிலர் விபச்சாரியாக்க முயல்கின்றனர்.....


இல்லாத அவளுக்கு
உள்ளவர்கள் கொடுத்திருந்தால்
இல்லத்திலே தங்கியிருந்திருப்பாள்..
இல்லாத போது இவளைப் போல்
பல சுமையாக்களும்,பாத்திமாக்களும்
இறை இல்லம் என்ன..?
வீதி,வீதியாய் அலைவதை தவிர்க்க முடியாது..
சில நேரம், சில நோட்டுக்களுக்காய்
தன் கற்பையும் வாடகைக்கு விடக்கூடும்......


அந்நிய ஆடவரிடமிருந்து
மறைந்து வாழ வேண்டிய நம் சமுதாயத்தின் கண்
அறிமுகமில்லாதவர்களிடம்
கெஞ்சி கெஞ்சி காசு கேட்கிறாள்
இப்போது அவள்
பாவம்  பிச்சைக்காரியாய் அடையாளமாகிறாள்..
வாழ்வதற்காய் அவள்
எத்தனை காமுகர்களிடம் போராடப் போகிறாளோ....?


No comments:

Post a Comment