Monday, November 7, 2011

எனக்குள் நீ...


 எனதான எல்லா அசைவுகளிலும் 
உனதான நினைவுகள்தான்
பூக்களாய் மலர்கின்றது...

என் வேலைத்தளத்திலும்
என் தனிமையிலும்
என் மனசுக்குள் பம்பரமாய்
நீ சுழன்று கொண்டிருக்கிறாய் 
ஒரு நிழற் படமாய் 
நீ அடிக்கடி என்னை சந்தித்து போகிறாய்...


ஆறாமல் வேதனை தரும்
சில காயங்களை  
கவிதையில் இறக்கி வைக்க 
பேனாவையெடுத்தால்
உன்னைப் பற்றியதான 
வார்த்தைகள்தான் வருகின்றது
ஆக,உன்னைத் தவிர 
வேறொன்றையும் என்னால்
எழுத முடியவில்லை.


என் பாதையில் 
பாவையொன்று நடந்து போகும் சத்தம் 
நீ நடந்து செல்லும் சத்தமாய்  
என் காதுகளுக்கு கேட்கிறது 
வந்து பார்த்தால் 
எவர் எவரெல்லாம் போகின்றனர் 
ஆனால்,நீ மட்டும் வருவதாயில்லை 
எதிர்பார்ப்புக்களுடன் ஓடி வந்த நான் ஏமாந்து போவேன்
இப்போதுகளில்
என் அக,புற தோற்றங்களில்
உன் விம்பங்கள்தான் காட்சியாய் விழுகிறது...

இத்தனைக்கும் காரணம்
நீ நிலவைப் போல்
தூரமாய் இருந்த போதும் 
நினைவுகளால் தினம் தினம்
என்னை தழுவுகிறாய்...


3 comments:

  1. //ஆறாமல் வேதனை தரும்
    சில காயங்களை
    கவிதையில் இறக்கி வைக்க
    பேனாவையெடுத்தால்
    உன்னைப் பற்றியதான
    வார்த்தைகள்தான் வருகின்றது
    ஆக,உன்னைத் தவிர
    வேறொன்றையும் என்னால்
    எழுத முடியவில்லை.

    //

    அருமையான வரிகள்

    ReplyDelete
  2. உங்கள் வருகைக்கு மிக்க நன்றி தொடர்ந்தும் என் வலைப்பூவை வாசித்து உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள்.உங்கள் வலைப்பூ மிக காத்திரமாகவும்,அருமையாகவுமிருக்கிறது வாழ்த்துக்கள்...

    ReplyDelete