Monday, November 28, 2011

கவனிப்பாரற்று...


பூக்களைப் போல்
மென்மையாய் வருடிய காதல்
பாலைவனமொன்றில்
கருகிக் கொண்டிருக்கிறது...

இன்பம் தரும் என்று
காதல் படகில் பயணித்த போது
துடுப்பிழந்து
மெல்ல,மெல்ல மூழ்கிக் கொண்டிருக்கிறது...

வாழ்க்கையின் கனவுகள்
நிறைவேறாமல் நீண்டு கொண்டே போகிறது
வயது போக ஞாபக மறதி குடி கொள்கிறது
ஆனால்,அவளது நினைவுகள் மட்டும்
குறையவில்லை
அவள் பல கோணங்களில்
என்னை கிளறிக் கொண்டிருக்கிறாள்...

இதயம் தன்னில்
தேக்கி வைத்த காதல்
கவனிப்பாரற்று
உடல் முழுவதும் காயப்படுத்திக் கொண்டிருக்கிறது...

 நான் எழுதிய
காதல் வரிகள்
வாசிக்கப் படாத
வரலாற்றுப் புத்தகமாய்
மேசையில் கிடக்கிறது....

No comments:

Post a Comment