Thursday, November 10, 2011

நீரை எப்படி அருந்துவது...



71 வீதம் நீரால் நிரம்பிய பூமிப் பந்தில் வாழும் நாம்  நீரோடு போராடிக் கொண்டிருக்கின்றோம்.நீரானது எம் உயிர் வாழ்வுக்கும் ஏனைய தேவைகளுக்கும் மிகவும் அத்தியவசியமானது.அதேபோல் இந்த உலகில் வாழும் ஏனைய ஜீவராசிகளுக்கும்,மரம்,செடி,கொடி,இன்னோரன்னவற்றுக்கும் நீர் உயிர் நாடி,இறைவனால் இந்த உலக வாழ் உயிரினங்களுக்கு வழங்கப்பட்ட உன்னதமான கொடைதான் நீர்,நமக்கு மிக இலவசமாக கிடைக்கின்ற பக்கவிளைவற்ற மருத்துவ  குணம்  கொண்ட இந்த நீர் அதன் இயற்கைத் தன்மையிலிருந்து மாறுகின்றஅல்லது மாற்றப்படுகின்ற போது சில வேளை நமது உயிரையும் குடிக்கிறது.இலங்கையைப் பொறுத்தளவில் தங்கள் வளவுகளில் அல்லது பொதுவாக தோண்டப்பட்ட கிணுறுகளிலிருந்து குடிப்பதற்கும் இதர தேவைகளுக்கும் நீரைப் பெறுவர்.ஆனால் காலம் செல்ல  குடி மக்கள் பெருத்த போது நீர் அசுத்தமடைவதனையும் தவிர்க்க முடியாமல் போனது.இதனால் நமது மூலை முடுக்கெல்லாம் வோற்றர் சப்ளை மூலமாகவே நீர் எடுத்துச் செல்லப்படுகிறது.இந்த நீரைத்தான் நம்மில் பாவிப்போர் அதிகம்.....

கவிதையில் காதலை பாடிக்கொண்டிருக்கும் நான் ஏன் இப்படியான பதிவை போடுகிறேன் என்று நீங்கள் உங்கள் தலைமயிரை கிள்ளியெடுப்பது எனக்கு புரிகிறது.நான் ஹஜ்ஜூப் பெருநாள் விடுமுறைக்காக ஊருக்குப் போயிருந்த போது என் கையில் ஒரு துண்டுப்பிரசுரம் கிடைத்தது.அது மிகப் பெறுமதியான துண்டுப் பிரசுரம் நமதூர்களில் அரசியலுக்கும்.ஒருவனை வம்புக்குயிழுப்பதற்கும்,அடிக்கப்பட்ட துண்டுப்பிரசுரங்களைத்தான் அதிகம் பார்த்திருக்கின்றேன்.ஆனால் அதற்கு முற்றிலும் மாறுபட்டு நல்ல சிந்தனையாளர்கள் எழுதிய துண்டுப்பிரசுரம்.நீங்கள் ஒவ்வொருவரும் படிக்க வேண்டும் என்பதற்காகத்தான் எனது பதிவில் பதிவு செய்கிறேன் வாசித்துப் பாருங்கள்...
அந்தப் பிரசுரம் இப்படித்தான் அமைந்திருந்தது
எல்லோருக்கும் இனிய
ஹஜ்ஜூப் பெருநாள் வாழ்த்துக்கள்

அதிக நீர் அருந்துவோம் ஆரோக்கியம் பெறுவோம்

ஃசாதாரணமான ஒருவர் ஒரு நாளைக்கு 3 லீற்றர் தொடக்கம் 6 லீற்றர் வரை நீர் அருந்த வேண்டும்

ஃ நாளாந்தம் ஒருவர் 6 லீற்றர் அதற்கு அதிகமாக நீர் அருந்துவது    ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது

ஃ அதிக நீர் பருகுபவர்களுக்கு பல வியாதிகள் கிட்டவும் நெருங்காது.அத்துடன்  அதிகம் நீர் பருகுவது உற்சாகத்தையும்,மகிழ்ச்சியையும்,முகப் பொலிவையும் தரும்

ஃ குளிர்ந்த நீரைப் பருகுவதைத் தவிருங்கள்.இளம் சூடான நீரை அல்லது சாதாரண நீரையே பருகுங்கள்...


வோற்றர் சப்ளை நீரை அப்படியே அருந்துவதைத் தவிர்ப்பது நல்லது
வோற்றர் சப்ளை நீரை பருகுமுன் செய்ய வேண்டியவை


01.சிறிது நேரம் கொதிக்க வைத்திருந்து ஆறிய பின் பருகவும்

02உருளையான போத்தலில் அடைத்து 8 முதல் 12 மணி நேரம் சூரிய ஒளி படுமாறு செய்து பருகவும்

03.வடிகட்டப்பட்டு குறைந்தது 1|2 மணித்தியாலமாவது சேமித்து வைத்திருந்து  பருகவும்

04.குறைந்தது 2 மணித்தியாலமாவது சேமித்து வைத்திருந்து மேலாக எடுத்து பருகவும்

வோற்றர் சப்ளை நீரை பாவிப்பவரா நீங்கள் இதனை கடைப்பிடித்தால் உங்கள் ஆரோக்கியத்திற்கு நல்லது


2 comments: