Monday, December 5, 2011

ஏனோ புரியவில்லை...


பல கதைகள்
என் மனதில் குவிந்து கிடக்கிறது
உன்னிடம் சொல்வதற்கு
சொல்வதற்காய் உன் அருகில் வரும் போது
வார்த்தைகள் மறுத்தோடுகிறது
ஏனோ தெரியவில்லை...

சந்திக்கும் சந்தர்ப்பங்களில்
ஒன்றுமே சொல்லாமல்
மௌனமாய் பிரிந்து போகிறோம்
பல கதைகள் கேட்கத் தெரிந்த நமக்கு
நமது கதையைத்தான் சொல்ல முடியவில்லையே...

எப்படியாவது
உன்னிடம் ஏதாவது சொல்ல எத்தனிக்கும் போது
நான் உன்னிடம் செல்லாக்காசாகிப் போகிறேன்
எப்போதுதான் உன் மடியில் செல்லமாய் அரவணைப்பாயோ...

நீ என்னை கழித்து பார்த்தாலும்
நான் உன்னை சேர்த்துத்தான் பார்க்கிறேன்
நீ எப்படியானாலும்
உன்னை நான் நினைப்பதிலும்
கவிபாடுவதிலும் காலம் கழிகிறது...

2 comments:

  1. Rishvanரொம்ப நன்றி நண்பரே தொடர்ந்தும் வாசித்து உங்கள் கருத்துக்களை சொல்லுங்கள்

    ReplyDelete