Thursday, November 25, 2010

வாழ்க்கை.......

வாழ்க்கை சிலர் சந்தேஷமாக பேசுவார்கள்,இன்னும் சிலர் கவலையாக கொட்டத்தொடங்குவார்கள்,வாழ்க்கை இது நிம்மதியாகவும்,மகிழ்ச்சியாகவும் அமைய மனிதனுக்குள் எத்தனை போராட்டங்கள்,வெட்டுக்குத்துக்கள் அவனவனது செயற்பாடுகளை பொறுத்தே அவர்களது வாழ்க்கையும் தீர்மானிக்கப்படுகின்றது.

ஆக,நாம் பிறந்தோம்,வாழ்ந்தோம்,மடிந்தோம்,என்றில்லாமல் நமது வாழ்க்கை மற்றவர்களுக்கு நல்ல பாடமாக இருக்க வேண்டும்.நமது இளமைக்காலத்தை வீணே கழித்துவிட்டு காலத்தை பழி போடக்கூடாது.இளமையிலே நமது முதுமைக்குரியதை தேடிக்கொள்ள வேண்டும்.இளமை சோம்பல் உள்ளதாகயிருந்தால்,முதுமை தேவையுள்ளதாகவே இருக்கும்.இளமைக்காலத்தை சொகுசாக கழித்தோம் என்றால்,முதுமை கடினமானதாகவே இருக்கும்.
இளமையில் நாம் கற்கிறோம்,முதுமையில் புரிந்துகொள்கிறோம்.அன்புள்ள இதயம் என்றும் இளமையாகத்தான் இருக்கும்,மனம் ஒரு போதும் முதுமையடைவதில்லை....

இரண்டு விடயங்களை நாம் இழந்த பிறகுதான் மதிக்கிறோம்.......
01.ஆரோக்கியம்.........02.இளமை......(இப்போதாவது இந்த இரண்டின் பெறுமதி உங்களுக்கு புரிகிறதல்லவா?..)
வாழ்க்கையில் அழுது கொண்டே பிறந்து,குறை கூறிக் கொண்டே வாழ்ந்து ஏமாற்றத்துடன் சாகிறோம்.
வாழ்க்கை இதுதானென்று நாம் உணர்வதற்குள் பாதி வயது போய் விடுகிறது.வாழ்க்கை பல மேடு,பள்ளங்களை தாண்டித்தான் வெற்றி பெற வேண்டும்.வாழ்க்கை என்பது புனிதமான யாத்திரை அதில் நீண்டகாலம் வாழ்ந்தோம் என்பது முக்கியமல்ல........

எவ்வளவு நல்ல முறையில் வாழ்ந்தோம் என்பதுதான் முக்கியம்.அன்பு,அறிவு,துணிவு.நேர்மை,கனிவு,உண்மை போன்ற நற் பண்புகள் கொண்ட மனிதனுக்கு இந்த உலகம் ஓர் இன்பமான வாழ்க்கையை அமைத்துத் தரும்..........வாழ்க்கையை வாழ்ந்துதானே பார்ப்போம் நண்பர்களே...........................

No comments:

Post a Comment