Monday, November 29, 2010

எரிந்து வீழ்வேன்...........

இப்போதெல்லாம்..
வாழ்க்கையை..
கோபங் கொண்டு பார்க்கிறது
வெட்கங் கொண்ட என் மனசு........

எரிந்து வீழ்வேன்.
ஒரு தீக் குச்சியாய்..
என்னையே எரித்துக் கொள்வேன்.
வாழப்படதா வாழ்க்கைக்காய்....

இந்த மழைக்கு.
கரைந்து போகிறது என் வீடு..
என்னவளின் ஞாபகங்களையும்
கரைத்துப் போகிறது..
நாளைய மகிழ்ச்சிக்காய்..
தூக்கத்தை ஒத்தி வைக்கிறது.
எனதான இன்றைய இரவு...

பெறுமதியற்றுப் போன
ஊமையின் மொழியைப் போல்
எனது உணர்வுகளும்..
எனக்குள்ளேயே செத்துப் போகிறது.....

இருப்பினும்,
உறவுகளின் உணர்வுகள்தான்
எனக்கான நாளைய நம்பிக்கை....இப்போதெல்லாம்..................

No comments:

Post a Comment