Saturday, July 9, 2011

சொல்ல மறந்த கதை......


சூரியன் நடு உச்சிக்கு வந்து வெளுத்து வாங்கிக் கொண்டிருக்கும் மதிய நேரம் அது...புலுக்கம் அதிகமானதால்.என் உடல் முழுவதையும் வியர்வை நனைத்துக்கொண்டிருந்தது.அதிலிருந்து மீள்வதற்கு என் வீட்டுப்பக்கம் இருக்கும் ஆற்றுப்பக்கம் போனேன்.என் அம்மாவின் அப்பா  நட்டு வைத்த  தென்னை மரம் ஆற்றுப்பக்கமாய் சாய்ந்து கிடக்கிறது.சட்டையைக் கழற்றி புற் தரையில் வீசிவிட்டு,அந்த தென்னை மரத்தில் சாய்ந்து கொண்டேன்.நன்றாக வீசிக்கொண்டிருக்கும் காற்று, ஆற்று நீரில் மிதந்து வர, என் உடம்புக்கு குளு குளு என்று இருந்தது.உடல் களைப்பும்,கவலையும் மறந்து தூக்கம் கண்களை தழுவிக் கொண்டிருக்கையில்,என் அம்மாவின் அப்பா என் ஞாபகத்திற்குள் வருகிறார்.என் சிறு வயதில் மிட்டாய் வாங்கித் தந்து,துவிச்சக்கர வண்டியில் என்னை சுமந்து கொண்டு ஊர் சுற்றிய,அம்மாவின் அப்பா,ஒரு நாள்,இந்த மரத்தடியில்,இது போன்றதொரு மதியப்பொழுதில் காற்று வாங்க வந்த போதுதான் இறந்து போனார்.
அவர் அதிகம் உடல் பலம் கொண்டவர்.தெலாந்து காலை தனியாக தூக்கி வைப்பார்.நாலுபேருக்கு தனியாக நின்று,தாக்கக்கூடிய பலம் கொண்டவர்.இப்படி இருந்த அந்த மனிதர்,இந்த ஆற்றங்கரையோரம்,இந்த தென்னை மரத்தடியில் காற்று வாங்க வந்தபோதுதான் இறுதி மூச்சைவிட்டர்.காற்று வாங்க ஆற்றுப்பக்கம் போன எனக்கு வியர்த்துக் கொட்டியது...ஆக காற்றுக்குக்கூட தாக்குப்பிடிக்க முடியாதவைதான்நமது உயிர்......


(... "சொல்ல மறந்த கதை" என்ற தலைப்பில்."வசந்த நிலா" நிகழ்ச்சியில் ஒலிபரப்புவதற்காய். நான் எழுதிய பிரதி....சொல்ல மறந்த கதை நிகழ்ச்சி இடம் பெறாததால்,அதற்காய் எழுதப்பட்ட பிரதியை எனது வலைப்பூவில் பதிவு செய்கிறேன்....)

No comments:

Post a Comment