Monday, July 25, 2011

காத்திருந்த காதல்


சித்தீக்கின் மூத்த மாமாவின் மகள்தான் ஷாமிலா.அவள் தனதூரிலுள்ள பெண்கள் பாடசாலையொன்றில் படித்துக்கொண்டிருந்தாள்.ஷாமிலா அவளது தாய் தந்தைக்கு கடைக்குட்டி,இதனால் அவள் வீட்டில் செல்லப்பிள்ளையாகவே வளர்ந்தாள்.இருந்தாலும் ஆன்மீகத்தில் அதிகம் பற்றுள்ளவள்,அழகானவள்,அன்பானவள்,இவள் விழிகளை உருட்டி,உருட்டி பேசும் போது கண்களை பார்த்துக் கொண்டு,வார்த்தைகளைக் கேட்டுக்கொண்டேயிருக்கலாம்.அவளது பண்புள்ள குணத்திலும்,அழகிலும் மயங்கிய சித்தீக்,அவள் மீது காதல் கொண்டான்...

ஷாமீலா மனைவியாக எனக்கு கிடைத்துவிட்டால்,என்னை விட அதிஷ்டாசாலி வேறு யாரு இருக்கமுடியும்,காலமெல்லாம் இவளை கண்கலங்காமல் காப்பேன்.வண்ண வண்ண சாரி உடுத்து அலங்கரிப்பேன்.இவ்வாறு கற்பனைகள் கலந்த கனவுகள் அவனுக்குள் முளைவிடத் தொடங்கியது. காலம் செல்லச் செல்ல,சித்தீக் காதல் பித்தனாக மாறினான்.தனக்குள் ஏற்பட்ட காதல் உணர்வுகளை அவளைக் காணும் போதெல்லாம் அங்க அசைவுகள் மூலம் வெளிபபடுத்துவான்.ஆனால் ஷாமீலா கண்டும் காணாமலும் போவாள்.இப்படி போகும் அவள் ஒரு வேளை என்னை விரும்பாவிட்டால்,.எந்நிலை என்னாகும். என்ற அச்சம் கலந்த சந்தேகம் அவனுக்குள் சதாவும் எழத்தொடங்கியது.இனிமேல் தனது காதலை தாமதப்படுத்தக்கூடாது என்று எண்ணிய அவன் நேரடியாக அவளது வீட்டுக்குச் சென்று தனது விருப்பத்தை வெளிப்படுத்தினான்....ஷாமீலா,சித்தீக்கின் உணர்வுகளை புரிந்து கொண்டாலும்,அவளால் காதலிக்கத்தான் முடியவில்லை,வீட்டில் தான் கடைசிப்பிள்ளை.என் தாய் என்னை படிக்க வைத்து பெரியாளாக்கி பார்க்க ஆசையாகயிருக்கிறார்.அதனை தான் நிறைவேற்ற வேண்டும்,படிக்கும் போது காதல் வந்தால் எப்படி படிக்கமுடியும்,அப்புறமா பார்ப்போம் என்று அவனது காதலை நிராகரித்தாள் ஷாமீலா...

ஆனால், சித்தீக் அவளை விட வில்லை,அவள்தான் அவனுக்கு உலகமே காலப்போக்கில் அவள் கிடைக்காவிட்டால்,நான் எப்படி வாழ்வேன்.அவளில்லாத வாழ்க்கையை அவனால் நினைத்துக்கூட பார்க்க முடியவில்லை.அவளை ஒவ்வொரு நாளும் நினைத்து நினைத்து உருக்குலைந்து போனான்...இப்படியே இரண்டு வருடங்கள் கழிந்து விட்டது அவன் அந்த இடவெளிக்குள் அவளுக்கு 50 கடிதங்கள் அனுப்பியிருந்தான்.ஆனால் அவளோ ஒரு கடிதம் கூட அனுப்பவில்லை.இதனால் அவன் மனம் நொந்து போனான்....


அவளது மனதில் என் காதலை எப்படி புரிய வைப்பது.சரி இன்னொரு தடவை அவளது வீட்டுக்குச் சென்று தன் காதலை புரியமளவுக்குச் சொல்லிப்பார்ப்போம் என்று எண்ணிய அவன் தனது துவிச்சக்கர வண்டியை மிதித்துக் கொண்டு அவளது வீட்டுக்குப் புறப்பட்டான்.எதிபாராமல் வந்து நிற்கும் சித்தீக்கை கண்டதும் ஷாமீலா திடுக்கிட்டாள்.கதிரையில் உட்கார்ந்திருந்தவள் எழுந்து வந்து,என்ன திடீரென இந்தப் பக்கம்,நான் தானே சொன்னேன் காதலிப்பதில்லை என்று, மீண்டும் மீண்டும் என் பின்னால் வராதே என்றாள்.அதற்கவன், ஷாமீலா கொஞ்சம் பொறுங்க,இஞ்சப் பாருங்க உங்க நிலமையை என்னால் புரிந்து கொள்ளமுடிகிறது.ஆனா என்னுடைய நிலமையை நீங்க புரியனும் அதற்காகத்தான் வந்தேன்.என்று ஆரம்பித்தவன்.....
வானம் பூமியை காதலிக்கிறது,சூரியனை சூரிய காந்தி காதலிக்கிறது,தென்னங் கீற்றுக்களை தென்றல் காதலிக்கிறது,வண்டு பூவை காதலிக்கிறது,மிருகத்தனமாய் வாழ்ந்தவர்களை காதல் நல்ல மனிதர்களாய் மாற்றியிருக்கிறது..இப்படியிருக்கும் போது உன்னை நினைத்து உருக்குலைந்து போயிருக்கும் என்னை நீதான் சரிப்படுத்தவேண்டும்.பீளிஸ் என் காதலை ஏற்றுக் கொள்ளுங்க,இல்லாவிட்டால் என்னைக் கொல்லுங்க என்றான்....சித்தீக் மூச்சு வாங்கி வாங்கி பேசுக்கொண்டிருந்ததை அமைதியாக கேட்டுக் கொண்டிருந்த ஷாமீலா,அவனது கன்னத்தில் அறைவதைப் போல் திடீரென சொன்னாள் தயவு செய்து வீட்டை விட்டு போங்க,எனக்கு உங்கள புடிக்கல்ல.. ஒரு நிமஷம்கூட இங்க இருக்க வேணாம் என்றாள். இதைக் கேட்ட அவன் இடி விழுந்ததாய் அதிர்ந்து போனான்,இனியும் அந்த இடத்தில் நிற்கக்கூடாது வேகமாக துவிச்சக்கரவண்டியை மிதித்துக் கொண்டு தனது வீட்டைச் சென்றடைந்தான்.

வீட்டில் இருக்கும் கட்டிலில் தூங்கியவாறு யோசிக்கிறான்.சித்தீக்கின்
நினைவுகள் முழுவதும் ஷாமீலாதான் வருகிறாள்.எப்போதாவது அவள் தனக்கு கிடைப்பாள் என்ற எண்ணத்தில் மனதை திருப்திப்படுத்திக்கொள்வான்.இப்படியாக அவனது நினைவுகளும்,திருப்திப்படுத்தலும் நகர, காலங்கள் வேகமாய் உருண்டோடியது அவள் பல்கலைக்கழகத்தில் இப்போது படிக்கிறாள் பல்கலைக்கழகம் சென்றவள் அங்கு சக பல்கலைக்கழக நண்பனை காதலிக்கலானாள்.இந்த விடயத்தை தெரிந்து கொண்ட சித்தீக்கின் இதயம் ஒரு கணம் நின்றுபோனது.....அவனை அவனாலேயே நம்ப முடியவில்லை,ஏங்கி ஏங்கி அழுதான்,ஆம், அவன் யாருக்காக ஏங்கித்தவித்தானோ,எந்தக் காதலுக்காக காத்திருந்தானோ அந்தக் காதல் அவனிடமிருந்து நழுவிப்போய் விட்டது.
அவனுக்கு அந்தக் காதல் கொடுத்த துன்பம் கடல் அலையைப்போல் தொடர்ந்தது.அதனால் பாதிக்கப்பட்ட சித்தீக்,ஏனோ தானோ என வாழ்ந்தான்,ஒழுங்காக உடுத்துக்கொள்வதில்லை போதைக்கு தன்னை அடிமையாக்கினான்.இதனால் அவனது வாழ்வு சீரழிந்து போனது...........

( இந்த சிறு கதை நான் உயர்தரம் படிக்கின்றபோது எழுதியது )


1 comment:

  1. வாழ்த்துக்கள் நண்பரே,உங்ககிட்ட இருந்து இன்னும் நிறையவே எதிர்பார்க்கின்றேன்.............

    ReplyDelete