Sunday, July 10, 2011

நீ இல்லாத போது........

நீ இல்லாத இரவு..
கனவுகளுடன் போராடி..
தோற்றுப் போகிறது...
உன் முகம் காணும் ஆவலில்..
பொழுது விடிகிறது..........

உன்னோடு வாழ்வதாய்...
கற்பனையில் மிதந்து..
மனசு இறக்கை கட்டி பறக்கிறது...
உன் பெயர் சொல்லலும்...
உன் முகம் நினைத்தலுமாய்...
காலங்கள் நகர்கிறது...
காலம் சுமந்த வலியாய்...
உன் நினைவுள் இருக்குமென...
மனசு நோகுகிறது...

உன் ஞாபகம் வரும் போதெல்லாம்...
உன் தெருவுக்கு வருவேன்...
நீயிருக்கமாட்டாய்...
நீ எட்டிப்பார்க்கும்  ஜன்னல் பூட்டப்பட்டிருக்கும்...
நீ இல்லாத சோகத்தில்...
மனசு வெறுமையாகிப் போகும்....
முகவரி தர மறந்து...நீ எந்த தேசத்தில் வசிக்கிறாய்......

நீ எனக்குள் காதல் மொழி பேசிய போது...
வாழ்க்கை அர்த்தப்பட்டதாய் உணர்ந்தேன்...
நீ விலகிய போது...
வாழ்க்கை வெறுத்துப் போனது...
உன்னோடு கை கோர்த்து....
ஆனந்தமாய் கழித்த நாட்கள்...
இப்போது அழுது கழிகிறது....

இப்போது நீ...
என்னை மறந்து...
என் காதலை தூரமாக்கி...
இன்னுமொருவருடன் சுகமாய் வாழலாம்...
நான் உன் நினைவுகளை சுமந்து....
போராடி..போராடி..தோற்றுப் போகலாம்........


ஒரு நாள் வரும்...
அப்போது என் நினைவு உனக்கு வரும்...
நீ என்னைத் தேடி வருவாய்....
அப்போது உனக்காய்  தூக்கம் தொலைத்த விழிகளும்...
என் கண்ணீரை தாங்கிய தலையணையும்...
சாட்சி சொல்லும்...........

3 comments:

  1. அருமை... காதலின் தவிப்பு நரக வேதனைதான் ....
    தொடரட்டும் கவி பயனம்....

    ReplyDelete
  2. http://kathalthesam-vathany.blogspot.com/2011/12/blog-post.html

    ReplyDelete
  3. Mathiஉங்கள் பதிவுக்கு நன்றி தோழி, தொடர்ந்தும் உங்கள் கருத்துக்களை என் வலைப்பூவுக்கு சொல்லுங்கள்...

    ReplyDelete