Monday, November 8, 2010

நிலவும்......நீயும்........

நிலவு அழகானது
நீ ஆர்ப்பாட்டமானவள்
நிலவு குளிரானது
நீ சூடானவள்
நிலவு மகிழ்ச்சி
நீ துக்கம்
நிலவு அழகான கவிதை
நீ கவிதைக்கான கருவூலம்
நிலவு நியாயம்
நீ அநியாயம்
நிலவு சரித்திரம்
நீ சகாப்தம்
நிலவை பார்த்தால் அன்பு
நீ பார்த்தால் வம்பு
நிலவு உலகின் பிரகாசம்
நீ எனக்கு அமாவாசை
நிலவு எல்லோருக்கும் பிடிக்கும்
நீ எல்லோரையும் பிடிப்பாய்


நிலவு முழுமை
நீ வெறுமை
நிலவு நிஜம்
நீ நிழல்
நிலவு வஞ்சகமற்றது
நீ வஞ்சகக்காரி
நிலவு சிரித்தால் சுகம்
நீ சிரித்தால் சூழ்ச்சி
நிலவு வசந்தம்
நீ வரட்சி
நிலவு  எல்லோருக்கும் காதல்
நீ ஒருவரின் காதலி என்று எல்லோருக்கும் நடிப்பவள்
நிலவு அழுவதில்லை
நீ முதலைக் கண்ணீர்வடிப்பவள்
நிலவு பேசத் தெரியாத பொக்கிஷம்
நீ பேசத் தெரிந்த கக்கிஷம்

இத்தனை வித்தைகளை
உன் பர்தாவுக்குள் மூடி மறைக்கும் உனக்கு
யார் நிலவென்று பெயர் வைத்தார்கள்......?
இன்னும் எனக்கு பரியவில்லை.........................

3 comments:

  1. உங்கள் வரவுக்கு ரொம்ப நன்றி.என் பதிவுக்கு முதலாவதாக வந்த பெருமை உங்களையே சாரும் தொடர்ந்தும் காத்திரமான கருத்துக்களை எதிர்பார்க்கின்றேன்...............

    ReplyDelete
  2. Rompa super. innum niraya elutha walthukkal.

    ReplyDelete