Thursday, June 2, 2011

உன்னைத் தேடி .......


உன்னைத் தேடி அலையும்
பயணம் நீள்கிறது..
உன் அன்பை நேசிக்கும்
என் இதயம் வாடுகிறது................

வெயில் ஊற்றும் நீரில்
என் மேனி நனைகிறது........
உன் தெருவோர வெக்கையில்
என் பாதம் கொப்பளிக்கிறது.........

அன்பை யாசிக்கும்,
பிச்சைப் பாத்திரமாய் நான்....
உன் வாசற் படியோரம்.....
கட்டி வைத்த நாயை
எட்டி ஓட வைத்து வேடிக்கை பார்க்கும்
எஜமானியாய் நீ...


இரும்புச் சங்கிலியாய்
இருக்க வேண்டிய நமது காதல்
காகிதச் சங்கிலியாய் தேய்ந்து போகிறது..
பாவம்...நமது காதல் காற்றடித்தால் அறுந்து போகும்...


உன்னை நேசிப்பதில்
என் சுயத்தை இழக்கிறேன்..
என்னை பித்தனாக்கி
என் நிழலில் உன்னை தேடுகிறேன்...
ஆனால் நீயோ.....!
ஒட்டி வரும் நமது உறவை
புறங் கையால் எட்டி தள்ளுகிறாய்...........

1 comment:

  1. உன்னை நேசிப்பதில்
    என் சுயத்தை இழக்கிறேன்..

    காதலில் சுயம் தொலைவது நல்லதுதானே ....
    அருமை...

    ReplyDelete