Monday, June 13, 2011

நமதான காதல்..........

உதடுகளுக்கு தாழ்ப்பாளிட்டு.....
வார்த்தைகளை விழுங்கிக்கொண்டு.....
விழிகளின் மொழி கொண்டு...
மௌனமாய் நகர்கிறது......
நமதான காதல்.........

 புரிந்து கொள்ள முடியாத......
இதயங்களின் மொழியால்..
இரகசிய தூதுவிடுகிறோம்....நானும்,நீயும்....
அதனால் மனசுக்குள்ளேயே அடங்கிப்போகிறது..
நமதான காதல்.....யாருக்கும் தெரியாமல்....

யார் யாரோ....வருவர்,
ஆனால் நீ வர மாட்டாய்...
காலடிச் சத்தங்களில்..உன்னைத் தேடுவேன்..
அது நீயாக இருக்கமாட்டாய்....அப்போது
மலையளவு பூத்த கனவு....
மேகங்களாய் கலைந்து போகும்........



விரல்கள் தொடாத....புல்லாங்குழலில்......
இராகமாகவே எனக்குள் விழுகிறாய்......
உனக்கான பாடல் என்னிடமிருக்கிறது...
புல்லாங்குழல் உன்னிடமிருக்கிறது.......
ஆனால்,வார்த்தைகளுக்கு தாப்பாளிட்டு....
மௌனமாய்..இரவு நீள்கிறது.....
யாருக்கும் தெரியாமல்....
நமதான காதல்..மனசுக்குள்ளேயே அடங்கிப்போகிறது........

No comments:

Post a Comment