Thursday, June 9, 2011

கவிஞர் பொத்துவில் அஸ்மின்,நஜ்முல்ஹூசைனுக்கு அகில இலங்கை முஸ்லிம் லீக் வாலிப முன்னணி பாராட்டு...........


இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாட்டில் கவிதைபாடி,நம் நாட்டிற்கு பெருமை தேடித்தந்த கவிஞர்களான என்.எம்.நஜ்முல்ஹீசைன்,பொத்துவில் யு.எல்.எம்.அஸ்மின்.இந்த இரண்டு கவிஞர்களையும்.அகில இலங்கை முஸ்லிம் லீக் வாலிப முன்னணி,08.06.2011 புதன்கிழமை பாராட்டி கௌரவித்தது.....

விழாவில் பாராட்டப்பட்ட கவிஞர் நண்பர் அஸ்மினின் அழைப்பை ஏற்று மருதானையிலிருந்து நானும் அவரும் அன்று மாலை பஸ்வண்டியில் விழா இடம்பெறவிருக்கும் எல்பிட்டிகலபிளட்ஸை நோக்கி பயணித்தோம்,அங்கு கதிரைகள் வெற்றிடமாகயிருந்தது.குறிப்பிட்ட சிலர் வந்திருந்தார்கள்.அப்போது நிகழ்வு ஆரம்பமாகவுமில்லை.அகில் இலங்கை முஸ்லிம் லீக் வாலிப முன்னணியின் தலைவர் சட்டத்தரணி ரஷீத் எம்.இம்தியாஸ் தலமையில் மாலை 07.00 மணியளவில்  கவிஞர்களுக்கான பாராட்டு விழா ஆரம்பமானது.அந்தநேரம் மண்டபம் நிறைந்த இலக்கிய ஆர்வலர்களும் பிரசன்னமாகியிருந்தனர்.



விழாவின் ஆரம்ப உரையை அதன் முன்னாள் தலைவரும்,முஸ்லீம்மீடியாபோரத்தின் தலைவரும்,நவமணிபத்திரிகையின்பிரதம ஆசிரியருமான என்.எம்.அமீன் நிகழ்த்தினார்.அவரது உரையில்,மலேசிய மாநாட்டில் கவிதைபாடி எங்களுக்கு பெருமை சேர்த்துதந்த இரண்டு கவிஞர்களையும் சிலாகித்துப்பேசியிருந்தார்.அதேநேரம் மாநாட்டில் அறிவிப்புச்செய்து,அரங்கை அதிர வைத்த நமது அறிவிப்பாளர்களான வீ.எச்.அப்துல்ஹமீத்,புர்கான் வீ இப்திகார்.ஆகியோரையும் நினைவுபடுத்தினார்.அதனைத்தொடர்ந்து தினக்குரல் பத்திரிகையைச் சேர்ந்த ஏ.எம்.நிலாம் உரையாற்றினார்.

நிகழ்வில் வாழ்த்து கவிதைபாட அழைக்கப்பட்ட கவிஞர் நாகூர்கனி கவிதைபாடிக்கொண்டிருக்கும்போதே,கவிமாலை பொழிவதை விட,பூமாலை சூடி அலங்கரிக்கப் போகிறேன் என்று கூறி,தான் கொண்டு வந்த பூ மாலையை நம்ம கவிஞர்கள் இரண்டு பேருக்கும் அணிவித்து மகிழ்ந்தார்.அதனைத்தொடர்ந்து மலேசிய மாநாட்டுக்கான இலங்கைக்குழுவுக்கு தலமை வகித்த கல்விமான் எஸ்.எச்.எம்.ஜெமீல் உரை நிகழ்த்தினார்.கவிஞர்களின் அதி திறமைகளை சுட்டிக்காட்டியதோடு,இலங்கைக்குழுவின் மலேசியப்பயணம் என்ற தலைப்பில் தனியாக உரையாற்ற வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார்.அதற்காக நாங்களும் காத்திருக்கின்றோம்.இவர் சுகயீனமுற்றிருந்த போதிலும் விழாவுக்கு வந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


அதனைத் தொடர்ந்து மலேசிய மாநாட்டில் கவிதைபாடி கலக்கிய வயதில் இளைய கவிஞரான பொத்துவில் கவிஞர் யூ.எல்.எம்.அஸ்மின் அங்கு பாடிய கவிதையை பாடி அரங்கு நிறைந் கரகோஷத்தினைகப் பெற்றிருந்தார். அதேபோல் நமது மூத்த கவிஞரான என்.எம்.நஜ்முல்ஹீசைன்  அவரும் அங்கு பாடிய கவிதையைப் பாடி அரங்கு நிறைந்த கரகோஷத்தினைப் பெற்றார்.
அதனைத் தொடர்ந்து எங்கள் தேசம் பத்திரிகையின் பசீர் அலி அந்தப் பத்திரிகையில் எழுதிய கட்டுரையின் சிறு பகுதியை வாசித்துக்காட்டினார்.அதில் அவர் அந்த கட்டுரையில் குறிப்பிட்டிருந்த ஒரு விடயம் என்னை மிகவும் கவர்ந்தது.அதாகப்பட்டது,அங்கு மேடையில் வீற்றிருந்த பெரும் கவிஞர்களை நமது கவிஞர்கள் கிளின்ட் வோல்ட் செய்து அசத்தினார்கள் என்பது........

பாராளுமன்ற உறுப்பினரான அல்ஹாஜ் ஏ.எச்.எம் அஸ்வர் உரை நிகழ்த்தினார்.அவரது அற்புதமான உரையினை அழகாக நிகழ்த்தினார். அந்த  மாநாட்டில் கவிஞர்களின் கவிதையினை ரசித்த விதத்தினையும் தெளிவுபடுத்தியிருந்தார்.பிரதி அமைச்சர் பசீர் சேகுதாவூத் அங்கு உரை நிகழ்த்துகையில் தான் இலக்கியத்தில் சிறு வயதிலிருந்து ஆர்வம் உள்ளதால்,கவிதையை ஓரளவு மதிப்பிடமுடியும்.ஆக அந்த அரங்கில் கவிதை பாடிக் கொண்டிருக்கும் கவிதைகளை மதிப்பிட்டுக் கொண்டிருக்கும் போது  நமது கவிஞர்கள் என்ன செய்யப் போகின்றார்கள்  என்று மனதிற்குள் பகை,பகைத்துக் கொண்டிருக்கும் போது கவிஞர் நஜ்முல் ஹுசைன்,கவிதை பாட வந்தவர்   அரங்கை கவிதைகளால் கவர்ந்திழுத்தர் எனக் குறிப்பிட்டார்.அதனைத் தொடர்ந்து கவிதை பாட வந்த நமது இளம் கவிஞர் அஸ்மின் மிகச்சிறந்த மரபுக் கவிதையினை வாசித்து  அரங்கை தன் பக்கம் கவர்ந்திழுத்தர்.இதனால் தான் மிகவும் சந்தோசப்பட்டதாகவும் குறிப்பிட்டார்.

விழாவுக்கு முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் நீதி அமைச்சர் ரஊப் ஹக்கீம் அழைக்கப்பட்டும் அமைச்சரவைக் கூட்டம் இருந்தமையால் அவரால் வர முடியவில்லை,அந்நக்கட்சியைச்சேர்ந்த செயலாளர் நாயகம் எம்.ரீ.ஹசன்அலி,பிரதியமைச்சர் பசீர்சேகுதாவுத்,ஆகியோர் வருகை தந்திருந்தனர்.பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம்.அஸ்வர்,புரவலர் ஹாசீம் உமர்,அகில இலங்கை முஸ்லிம் லீக் வாலிப முன்னணியின் அங்கத்தவர்கள் என முன்னாள் அமர்ந்திருந்தனர்.விழா அரங்கில் நான்கு பெண்கள் கலந்து கொண்டமையையும் அவதானிக்க முடிந்தது......

இறுதியாக மலேசியா மாநாட்டில் கவிதைபாடிய நமது கவிஞர்களான என்.எம்.நஜ்முல்ஹீசைன்,யூ.எல்.எம்.அஸ்மின் ஆகியோருக்கு புரவலர் ஹாசீம்உமரினால்.பொன்னாடை போர்த்தி,பாராட்டுச்சின்னம் வழங்கி கொளரவிக்கப்பட்டனர்.அதனைத்தொடர்ந்து ஏற்புரை நிகழ்த்தப்பட்டு,அங்குவந்திருந்த இலக்கியவாதிகள்,ஆர்வலர்கள்,அதிதிகள் எல்லோரும் கைகுலுக்கி வாழ்த்துச்சொல்லி அங்கிருந்து விடைபெற்றனர்.நானும் சந்தோஷம் தரும் நிகழ்வில் கலந்து கொண்ட மகிழ்ச்சியோடு வீடேகினேன்..........

No comments:

Post a Comment