Monday, June 6, 2011

சிதையும் நினைவுகள்.......


தெரியாதவர்களாய்
கடந்து போகிறோம் தெருவோரம்
நானும் நீயும்.....
தியாகங்கள் செய்து காதலித்த நமது காதல்
யாரோ ஒரு வழிப் போக்கனால் கத்தரிக்கப்பட
காதல் அநாதையாய் அலைகிறது...



ஞாபகமிருக்கிறதா...?
பள்ளிக்கூட பலாமரத்தடியில்
காதல் கடிதங்கள் பரிமாறியது...
காதல் கடிதங்கள் மீதமிருக்க..
நானும் நீயும்
யாரோ ஒருவனால் முகவரி தொலைக்கப்பட்டிருக்கிறோம்..
பாவம்..பள்ளிக்கூடமும்,பலாமரமும்.......

வயிற்று வலியால்....
வகுப்புக்கு வராத போது
துடி துடித்துப் போனேன்...
என்னை நீ ஆசுவாசப்படுத்தினாய்..
இப்போது நீ இடுப்பு வலியால் துடிக்கிறாய்..
உன்னை யார் ஆறுதல்படுத்துவார்......

சத்தியம் செய்து
நமது காதல் ஒப்பந்தமானது
அப்படித்தான் அந்த நாட்களும் நகர்ந்தது..
ஆனால்,எவனோ ஒருவன் இன்று கிழித்து வீசியுள்ளான்
நமது காதலை.......

நீண் இடவெளிக்குப் பின்னர்
நானும் நீயும் சந்தித்தோம்..
விழிகள் பேசத்துடித்தது....
ஆனால்,தூரத்து உறவுகளைப் போல் பிரிந்து போனோம்...
யாரோ ஒருவனின் சூழ்ச்சி பலித்திருக்கிறது....

No comments:

Post a Comment