Tuesday, July 5, 2011

குஞ்சு பொறியா கனவுகள்......

என் மீதான...
ஆயிரம் கனவுகளை..
அடைகாத்து வைத்திருக்கிறாய்...
உனதான கனவுகள் ...,
குஞ்சு பொறிக்கும் நாளுக்காகவும் காத்திருக்கிறாய்...
உன் கனவுகளையும், காத்திருப்புக்களையும்,
அலங்கரிப்பதற்கு என்னால் முடியாமல் தவிக்கிறேன்..
பாவம் நமது காதல் இடையில்..,
மரணித்துப் போகும் என்பதை அறியாமல் ..
கனவுகளுடன் பயணிக்கிறாய்....

வாழ்க்கையின்...
எல்லா நிறங்களையும் கொண்டு..
உன்னையும்,என்னையும்.அழகுபடுத்த..
என்னிடமிருக்கும் தூரிகையை கேட்டு....
தினம் அழுகிறாய்...
தரமுடியாமல்..உறவுகள்  என்னை தடுக்கின்றன...
நீ கனவு காணும், வாழ்க்கையின் அத்தனை ஓவியங்களும்..
இடை நடுவே சிதைந்து போகும் என்பதை அறியாமல்..
உன் கனவுகளுடன், என்னை சுமந்து செல்கிறாய்.....


நீ எனக்கு கிடைக்க வேண்டிய அழகான  பூ....
இந்தப் பூவை  அணைத்துக் கொள்ள தெரியாமல்....
தினம்..தினம்..தவித்துக் கொண்டிருப்பதை..
உன் மனமறியுமா...?
உன்னை பூஜிக்க முடியாமல்..
என் மனசு வெறுமையாகிறது...
நானும்..நீயும்..இணையமுடியாத வாழ்க்கையில்..,
கனவுகளுடன் பயணிக்கிறாய்.....

உன் சிறு புன்னகையில்...,
என் மனசை அள்ளியெடுத்தவள்..
சிறு துளி கண்ணீரில்....,
ஆயிரம் கதைகள் சொல்பவள்....
என் கண்ணீரும்,புன்னகையும் உனக்குத்தான் என ஒப்பந்தம் செய்வாள்..
பாவம்..ஒப்பந்தம் தூக்கி வீசப்படும் என்பதையறியாது,
வாழ்க்கையின் கனவுகளுடன் பயணிக்கிறாள்...

இன்னுமொரு இதயமாக எனக்குள் வந்தவள் நீ....
ஆனால்,பொருத்தமில்லா சோடிகளென....
சிலர் சாபமிடுகின்றனர்..உன்னையும்,என்னையும்..
சாபங்கள் பலமாக பிரார்த்திக்கப்படுகையில்.,
நான் நசுங்கிப்போகிறேன்..
உன்னை அணைத்துக் கொள்ளமுடியாமல்..,

வாழ்க்கையின்.,
ஆயிரம் கனவுகளுடன் நீ பயணிக்கிறாய்....
அந்தக் கனவுகளை அலங்கரிக்க முடியாமல்..,
நான் தவிக்கிறேன்.....

4 comments:

  1. கவிதை நன்றாக உள்ளது அஸ்கர்

    முகப்புத்தகத்தின் குரிப்புகள் ஊடாகப் பகிர்ந்து கொண்டால் இன்னும் பலரைச் சென்றடையும்

    ReplyDelete
  2. நன்றி மன்னார் அமுதன்...இப்போது முகப்புத்தகத்தில் பகிர்ந்துள்ளேன்.........

    ReplyDelete
  3. Really fantastic one.. I appreciate you... And expecting more interesting poems from you.. I wish you all the best..

    ReplyDelete
  4. Thank u for u are encouragements

    ReplyDelete