Monday, September 19, 2011

நீ இல்லாத நேரம்...


நீ என்னை அரவணைத்து
பின்னர் வீழ்த்தி
இன்னுமொருவருடன்
வாழப் புறப்பட்ட போதும்.
கடிகார முட்களாய்
நீ என்னை சுற்றிக் கொண்டேயிருக்கிறாய்.....

வார்த்தைகளால் முட்டி மோதி
நீ என்னிடம் தோல்வியுற்ற வேளை
நமது காதல் வீழ்ந்தது.
அதற்கு பிறகும்
எனது வீட்டு சுவர்க் கடிகாரத்தைப் போல்
எனக்குள் நீ வலம் வருகிறாய்......

நீ விடைபெற்ற
அந்தக் கணத்தில்
பிரியமான ஒருவரின் இழப்பின் பின்னரான சோகமாய்
நான் வீந்து நொறுங்கினேன்
அப்போதும் என் கைக் கடிகாரத்தைப் போல்
எனக்குள் நீ என்னை சுற்றி சுற்றியே
பின் தொடர்ந்து வருகிறாய்.......

No comments:

Post a Comment