Tuesday, September 20, 2011

உணர்வுத் துளி......


வழமை போல்
நகர மறுக்கும்
உனது ஞாபகங்கள்
இன்று சில நிமிடங்கள்
என்னுடன் முரண்பட்டுக் கொண்டன......
******************

அதிகம் பேசாத
நமது காதல் பற்றி
எப்போதாவது நீ நினைத்ததுண்டா....?
 ********************

காத்திருந்து,ஏமாந்து,கவலைப்பட்டு
முட்டாளாகிப் போன
என்னைப் பற்றி
இனி பாடப் போவதில்லை......
 **********************

நிகழ்ச்சி இல்லாத
அறிவிப்பாளரைப் போல்
அரங்கேற்றம் இன்றியே
அடங்கிப் போகிறது நமது காதல்......
********************

 வெறுக்கப் பட்ட
என் உணர்வுகள் பற்றி
இனி கவலைப் படப் போவதில்லை
அது பற்றி
இனி கவிதை எழுதப் போவதில்லை.....
 *********************

தூரத்தில் நிற்கும் உறவுகள்
துரோகம் இழைக்கும் நட்புக்கள்
குற்றம் சொல்லும் காதல்
மனசும்,மண்ணாங்கட்டியும் என
வாழ்க்கை கழிகிறது......




No comments:

Post a Comment