Tuesday, September 27, 2011

உன் தூரல் என்னில்.....


நீண்ட இடவெளிக்கு பின்னர்
உலர்ந்து போன  என் மனதில்
மழைத் தூரலாய் விழுந்தாய்
அது கோடைக்கு பின்னரான
மழையாய் என்னை நனைத்தது.....

பூ வாசமாய் மணம் பரப்பும் உன்னை
அமைதியான நதியைப் போல் நேசித்தேன்
ஏக்கங்களுடன் விழுங்கிய
என் காதல் வார்த்தைகளை
சிறு துளியளவு கூட புரிந்து கொள்ளவில்லை
உன்னை சந்தித்து திரும்பும் போதெல்லாம்
ஏமாற்றத்துடன் விடை பெறுவேன்.........

வாழ்க்கை கடலில் பயணிப்பதற்காய்
நான் கட்டிய கனவுக் கப்பல் திசைமாறிப்போயுள்ளது
ஆதலால் என் மனக் கப்பலும் உடைந்து போனது
நீண்ட இடவெளிக்குப் பின்னர்
இப்போதுகளில் உன் பாசத்தை
மழையாய் என் மீது கொட்டுகிறாய்
எப்படி சரி கட்டுவேன்
உன்னால் உடைந்து போன என் மனக் கப்பலை....

 நீ எழுத்துப் பிழைகளுடன்
அனுப்பி வைத்த கவிதைகளை
என் சின்ன வயதுப் புகைப் படத்தை
பார்த்து மகிழ்வதைப் போல்
இப்போதுகளில்
நான் அப்படி மகிழ்வதை தவிர
வேறென்னதான் செய்ய முடியும்...

 நீண்ட நாட்களுக்கு பிறகு
மயிலிறகு வார்த்தை கொண்டு
என் மேனியை நீ தடவினாய்
அது மென்மையாய் என்னை தாலாட்டியது
உனக்குள் நான் இல்லாத போதும்
எனக்குள் நீ எப்போதும் ஞாபகமாய் பயணிப்பாய்....


3 comments:

  1. இங்குமா சார்?:p

    ReplyDelete
  2. சீனுவாசன்..உங்கள் வரவுக்கும் கருத்துக்கும் ரொம்ப நன்றி....உங்கள் பக்கம் அருமையாக இருக்கிறது எனது வலைத்தளம் பற்றிய உங்கள் கருத்துக்களையும் சொல்லுங்கள். பழகுவோம் இனிமையாகப் பழகுவோம்....

    ReplyDelete
  3. Sumaiya..உங்கள் வரவுக்கு நன்றி தோழி...இங்குமா என்று எதை கேட்கிறீங்க என்று புரியவில்லை தெளிவா சொல்லுங்க....உங்கள் கருத்துக்களை தொடர்ந்து பரிமாறுங்கள்...

    ReplyDelete