Thursday, September 22, 2011

வாடகை வீடு....


பல்லாயிரம்
கனவுகள் சுமந்து
வாடகை வீட்டில்
வாழ்க்கை கழிகிறது....

நிரந்தரமில்லா
இந்த வாடகை வீட்டில்
ஒரு அந்நியனைப் போல்
குடியிருக்க வேண்டியிருக்கிறது.....

யார் வந்தாலும்
அடுத்த வீட்டுக்காரன்
தப்புத் தப்பாய் பார்க்கிறான்
ரத்த உறவுகள் வந்தாலும்
முறைத்துப் பார்க்கிறான்
ஒர் எதிராளியைப் போல்
பயந்து பயந்து  அந்த வாடகை வீட்டில்
வசிக்க வேண்டியிருக்கிறது....

எங்கள் ஊர்களில்
சுதந்திரமாய்
சுற்றித் திரிந்த
எங்களுக்கு
வாடகை வீட்டில்
நிம்மதியின்றி உறங்க வேண்டியுள்ளது.
அரசியலைப் போல்
வாடகை வீட்டிலும்
எந்த நேரத்திலும் எதுவும் நடக்கலாம்....

வாடகை வீட்டில்
என்ன நடந்தாலும்
எட்டிப்பார்க்காத அந்த வீட்டு உரிமையாளன்
மாத முடிவில்
வீட்டு வாடகைப் பணம் பெற
அதிகாலையிலேயே வந்துவிடுவான்
வாடகை வீட்டில் வசிப்பவர்களும்
உங்களைப் போல்
வாழ்க்கையை நகர்த்தும் மனிதர்கள்தான்......

தலை எழுத்து
தலை நகரில் வாழ வைக்க
வாடகை வீடு மாறி மாறி
வாழ்க்கையும் அலுத்துப் போகிறது
வெறுத்துப் போன வாடகை வீட்டில்தான்
வாழவேண்டியுமிருக்கிறது....

ஒவ்வொரு முறையும்
வீடு மாறும் போதெல்லாம்
சந்தோஷங்களையும்
சோகங்களையும்
பகிர்ந்து கொண்ட
அந்த வாடகை வீடு
துக்கத்தோடு விடை கொடுக்க
நண்பர்களும்-நானும்
மூட்டை முடிச்சுக்களுடன்
இன்னொரு வாடகை  வீட்டுக்கு
புறப்பட்டுப் போகிறோம்
இதுதான் இந்த நகரத்து
வாடகை வீட்டு வாழ்க்கை......

2 comments:

  1. Shamilsheriff விதி வரைந்த வழியில் வாழ்க்கை பயணம்....

    ReplyDelete