Wednesday, June 15, 2011

அடம் பிடித்தல்......

என்னை ஏற்றுக்கொள்ள,
ஏன் அடம் பிடிக்கிறாய்.....
என் உணர்வுகளை புரியாமல்,
ஏன் விலகிப்போகிறாய்.....

நான் உன்னை நினைக்கத் தவறினால்,
நீ என்னை மறக்க நினைக்கிறாய்...
காரணம் கேட்டால்,
தீவிரவாதியைப்போல் முறைத்துப்பார்க்கிறாய்....




நீ கண்ணீரை என் மீது வீசுவாய்..
நான் புன்னகையை உன் மீது தூவுவேன்...
என்னை உதடு கடித்து முறைத்துப்பார்ப்பாய்..
அப்போது அப்பாவியாய் நகர்ந்து செல்வேன்...
என்னை உனக்கு உரத்துச் சொல்லும் போது....
நீ மௌனமாய் பயணிக்கிறாய்..


நான் உனக்கு காதல் மொழிகளால் தேனூற்றும் போது..
நீ என்னை மொழிகளால் காயப்படுத்துகிறாய்....
நான் உன்னை நேசிக்கும் போது...
நீ என்னை வெறுக்கிறாய்...
காலம் கடந்து நான் இன்னுமொருவரால் நேசிக்கப்படுவேன்..
நீ அப்போது என்னால் வெறுக்கப்பட்டிருப்பாய்....

என்னை புரிந்து கொள்ளாமலும்
ஏற்றுக் கொள்ளத் தெரியாமலும்..விலகிப் போகிறாய்..
எனக்கான காலம் வரும்..
அப்போது இன்னு மொருவரால் நேசிக்கப்படுவேன்..
உன்னை ஏற்றுக் கொள்ள முடியாமல்...
நான் தூர நிற்பேன்.....

2 comments:

  1. அடடடடா கவிதை மழை பொலிகிறார் அஸ்கர்..அனைவரும் வந்து நனைந்துவிட்டுப் போங்கள்..

    ReplyDelete
  2. நன்றி சப்னா....என் கவிதை மழையில் நனைவதுடன் உங்கள் கருத்துக்களையும் சொல்லுங்கள்....

    ReplyDelete