Thursday, October 6, 2011

நிஜமில்லா நிழலில்....


வார்த்தைகளை கோர்த்து
உன்னை சோடித்து
உன்னை ஏமாற்றுவதில்
எனக்கு விருப்பமில்லை...

வார்த்தைகளின் மாயைக்குள்
மயங்கி விழுந்து
மீள முடியாமல்
போராடும் பலரைப் போல்
நானும் நீயும்
வாழ்க்கையில் இணையாத போது
அந்தப் பாவத்தை எங்கு போய் தீர்ப்பேன்
ஆக.உன்னை ஏமாற்றுவதில்
எனக்கு உடன் பாடில்லை...

இனிப்பாய் பேசலாம்
உணர்வுகளை பகிரலாம்
வார்த்தைகளை விழுங்கி
கொஞ்சி மகிழலாம்
கன நேரம் கதை பேசி
காலம் கடத்தலாம்
புல்வெளியில்
நானும் நீயும் உருண்டு புரள ஆசை வரலாம்
இத்தனையும் பொய்யாகின்ற ஒரு நாளில்
நானும் நீயும்
வெறுத்து வாழ்வோம்
ஆக.இனி காதல் வார்த்தைகள் பேசி
 ஏமாற்றுவதில்
எனக்கு இஷ்டமில்லை...

தடுக்கப் பட்டவைகளை
விரும்பும் போது
பலரால் நாங்கள் வெறுக்கப்படலாம்
இல்லாத பொல்லாத  வார்த்தைகளால்
சில நேரம் இகழப்படலாம்
நிஜமற்ற  வாழ்க்கையில்
நிழலாய் பயணிப்பதற்கு
என் மனம் உறுத்துகிறது
உனதான  பாதையில் நீ பயணி
எனதான பாதையில் நான் போகிறேன்...

2 comments:

  1. raja நன்றி நண்பரே தொடர்ந்தும் உங்கள் மேலான கருத்துக்களை எதிர்பார்க்கின்றேன்...

    ReplyDelete