Monday, October 17, 2011

நிறமற்ற கனவு...


மறந்து போன
நமது கடந்த நாட்களின் பாடல்
இனி மீண்டும் வரப் போவதில்லை...

மொழிகளை ஊமையாக்கி
உணர்வுகளை ஓரங்கட்டி
சைகைகளோடு பேசிக் கொண்ட போதும்
வலிகள் எதுவுமின்றி
மெதுவாய் பயணித்தது நமது காதல்...

வசீகரமும்,கவர்ச்சியும்
காதலின் படிமங்களுமின்றி
நாம் காதலர்களாக மாற்றப்பட்டோம்
ஆனால்,உலகக் காதல் போல்
நமது காதல் படரவேயில்லை...

துண்டிக்கப்பட்ட
உறவை மீளமைக்க
நாம் வடித்த கண்ணீரின் அளவு
சோகப் பாடலின் இசையைப் போல்
தேங்கிக் கிடக்கிறது என் மனதில்...

சூரியன் உதித்து மறையும் போதெல்லாம்
நான் வந்த உன் தெருவும்
நீ எட்டிப் பார்க்கும் ஜன்னலும்
குரல் எழுப்பும் உன் விழிகளும்
இப்போது முகவரியில்லாதவரினால்
வேட்டையாடப்பட்டுள்ளது...

 உனக்கான பரிசுகள்
உன்னை தேடி வரும் நாட்கள்
வெறுமையாய் என்னை கடந்து செல்கிறது
இப்போதுகனவுகளற்ற பொழுதுகளாய்
ஒவ்வொரு நாளும்
அர்த்தமின்றி பிறக்கிறது...



No comments:

Post a Comment