Monday, October 24, 2011

என்னை தாலாட்டும் பூ


எனதான கனவுகள்
கரைந்த போதும்
உனதான ஞாபகங்கள்
கலையாமல் எனக்குள் நீந்துகிறது...

என் உணர்வுகளுக்குள்
முரண்பட்டுப் போகும் உன்னை
முழுமையாய் நேசிக்கிறேன்
என் நெஞ்சுக்குள் வைத்து
கனவு காண்கிறேன்...

இராகமாய் கசியும்
தாலாட்டும் உன் வார்த்தைக்காய்
தவமிருக்கும் இந்த குழந்தை மனதின்
ஏக்கங்களை எப்படி உனக்குச் சொல்வேன்
எனதான எதிர்பார்ப்புக்கள்
என்னிடமே திரும்பி வருகின்றன
வாங்கிக் கொள்ளத்தான் யாருமில்லை...

பாசத்திற்காய்
உன்னைப் பார்ப்பேன்
சொற்களால் என்னை வெறுப்பாய்
உன் ஓரப்பார்வையால் பூத்தூவுவாய்
நீ தூவும் அந்தப் பூவில்
நான் அடையும் ஆனந்தம் உன் மனமறியுமா...?

சந்திப்புக்களை
தவிர்த்துக் கொள்ளும் நீ
ஒரு சந்தர்ப்பம் கொடு
நான் மௌனமாக்கிய வார்த்தைகளை
கொட்டித் தீர்ப்பேன்
உன் இதயம் நனையும் படி...

வலுவிழந்த வாக்குறுதியால்
உன் மனதை காயப் படுத்தவில்லை
தொலை பேசியில் வர்ண ஜாலம் தடவும்
பகட்டுக் காரன் நானல்ல
உயிராக நேசிக்கும் உன்னை
என் மனசுக்குள் வைத்து
வாழ விரும்புகின்றேன்...

நிலவைப் போல்
குளிர்ச்சி தரும் உனக்குள்
மழையாய் நனைய வருவேன்
அப்போது உன் கண்ணம்
சிவந்து போகும் வெட்கத்தினால்...

No comments:

Post a Comment