Wednesday, October 19, 2011

உயிரிலே கலந்து...


அந்தி வானம் கலைந்தோடுகையில்
உன் நினைவுகள் மேகமாய்
நகர்ந்து கொண்டிருக்கிறது
உனதான பாசம்
என்னுள் கலைந்து கரைகிறது..

தினம் உச்சரிக்கும் பாடலாய்
என் காதுகளுக்குள் ஒலிக்கிறாய்
நான் எழுதும் கவிதையில்
நிழலாய் வருகிறாய்
நான் நேசிக்கும் புத்தகமாய்
என் மனதுக்குள் வாசிக்கப்படுகிறாய்
உன் புன்னகையைப் போல்
எனக்குள் மகிழ்ச்சியாய்
நீ இருக்கிறாய்...

சில வேளை
அடம்பிடித்தலால் முரண்படுகிறாய்
வார்த்தையின் விலகுதலால்
வெறுத்துப் போகிறாய்
ஆதலால்,உன் வாசமின்றி
நான் வாடிப் போகிறேன்
நான் மலரவும், நீவாழவும்
வரம் கேட்டு நிற்கிறேன்...

No comments:

Post a Comment