Monday, December 6, 2010

மறத்தலுக்கு பின்னரான நினைத்தல்..........

இன்றிரவு...
நினைக்கப் பட்டாய்..நீ
பழஞ்சோறைப் போல்.....

இப்போது பெய்யும்..மழையைப் போல்.
இம்சைகள் பல புரிந்தாய்..
ஏக்கம் தாங்காமல் தூக்கம் வந்தது..
தூக்கம் தாக்கமாயிப் போனது....அடி பாவி.....





நீ நினைக்கப்பட்ட போது..
நான் விலக்கப்பட்டேன் உன்னால்...
நான் விலகிய பிறகு...
உன்னால் நினைக்கப் படுகிறேன்......
மறத்தலுக்கு பின்னரான நினைத்தல்.... நியாயமற்றது.....

மறந்து நினைப்பது..
நினைத்து மறப்பது.....
வாடிக்கையாகிப் போனது உனக்கு...
அதனால் வேடிக்கையானது வாழ்க்கை உனக்கு.............

என்னை மறந்த போது...
பலரால் நினைக்கப் பட்டாய்...
பலரும் பிரிந்த போது...
என்னை நினைத்தாய்...
உன்னை ஏற்கச் சொன்னாய்..
மறத்தலும். நினைத்தலும் உனக்கு பழக்கமானது..
பின்னர் எப்படி ஏற்றுக் கொள்வேன்.........

இப்போது......
நான் பாதி....நீ பாதி என்பது வெறுஞ் சொல்லாடல....
நான் என்பது வேறு.....
நீ என்பது வேறு......

பலராலும் மறக்கப்பட்ட போது...
நீ என்னை நினைத்தாய்....
பாவம்...,
இன்றிரவு..,
நீ நினைக்கப் பட்டாய்...என்னால்..,
வீசிய பழஞ்சோறாய்................

No comments:

Post a Comment