Monday, December 20, 2010

ஞாபகித்தல்...........

நேற்றிரவு
கனவில் வந்தாய்
செல்லத்தனமாய் சினுங்கினாய்
உதடு விரித்து புன்னகைத்தாய்
என் கோபங்களை தணிக்க
என் தலையில் குட்டினாய்
நல்ல காலம்..நீ கனவில் குட்டியதால்,
என் தலை வலிக்கவில்லை..........

உன் பெயரை
என் கவிதையில் எழுதுமாறு
கெஞ்சிக் கேட்டாய்...
அன்பே.. உன் பெயர்
அழகான ஹைக்கூ கவிதை..
விமர்சிக்கப்படும் என் கவிதையில்
உன் பெயரை நான் எழுத
என் கவிதை இன்னுமொருவரால்,
விமர்சிக்கப்படும் பொழுதில்
நீயும் விமர்சிக்கப்படுவாயில்லையா...?
ஆக!என்னால் வாசிக்கப்படும்
அழகான கவிதையாய்
எப்போதும் என்னுள் நீ இருப்பாய்....

உன்னோடு முரண்பட்ட பொழுதுகளில்
எனக்காய் நீ எத்தனை முறை அடக்கி வாசித்திருக்கிறாய்
உனக்காய் பலபேர்
உன் வாசற்படியோரம் தவமிருக்கையில்
எனக்காய் நீ சுவாசிப்பாய்
பல பேரால் இவன் வெறுக்கப்படுகையில்
நீ மட்டும் நேசிக்கிறாய்...
அன்பே..உன்  காதலை;
என் மனசுக்குள் வைத்திருக்கிறேன்.........

எப்போதும் நீ விசாரிப்பாய்
எப்போதாவது நான் விசாரிப்பேன்
பாதை மறந்த போதிலும்
பாசம் காட்டத் தவறியதில்லை
நேற்றிரவு கனவில் ஞாபகப்படுத்தினாய்
நமது பழைய கதையை...........


நேற்றிரவு
கனவில் வந்தாய்
டயரியைப் புரட்டி,
ஒவ்வொன்றாய் ஞாபகப்படுத்தினாய்
செல்லத்தனமாய் சினுங்கினாய்
என் தலையில் குட்டினாய்
நல்ல காலம்..,கனவில் நீ குட்டியதால்
என் தலை வலிக்கவில்லை....................

3 comments: