Tuesday, December 14, 2010

காற்றலையில் உங்களோடு......


உன் வார்த்தைகளின்
இடை வெளிகளில்
மறைந்து கொள்கிறது
என் மௌனம்.....


*******************

கோபத்தில்,
என்னை ஆசுவாசப் படுத்த
உன்னால் எப்படி முடிகிறது
இந்த வித்தைளை எங்கே கற்றுக் கொண்டாய்.......
*******************

சேர்வோம்
என்ற நம்பிக்கையில் பிரிந்தோம்
இருப்பினும்,நிரந்தரமாய் பிரிந்தோம்
நினைவுகள் மட்டும் மீதமிருக்க...
*******************

உன்னோடுயிருந்த
நாட்களை மறப்பது எப்படி..
கடிகாரம் பார்க்கும் போதெல்லாம்
உன்னையும், நீ விட்டுச் சென்ற என்னையும்
ஞாபகப்படுத்துகிறது......
**************************

பார்த்து,பார்த்து......
நெஞ்சில் புதைந்த உன் முகம்
பார்த்து,பார்த்து
வளர்ந்த நம் காதல்
வெறும்,பார்வையாலே
பிரிந்து போனது.............
***********************
ஆயிரம்,
சேதிகள் சொல்ல
உன்னருகே வருவேன்
நீ பார்க்கும் பார்வையால்
ஊமையாகிவிடுவேன்.........

உனக்கான
என் கவிதையால்
என் டயரியின் பக்கங்கள் நிரம்புகின்றன
ஆனால்,
உன்னைப் போல்
அழகான கவிதை  ஒன்றுமேயில்லை.......
****************************

நீ
தூரமாகின்ற போது
நிலா முற்றத்தில்
ஒரு கவிதை செய்து பாடுவேன்
உன் ஞாபகங்களை........
*************************

காதலுக்கு
கண்கள் இல்லையென்பது
மிகைப்படுத்தப் பட்ட பொய்தானே..
இல்லையென்றால்
காதலின் வலியால் வரும்
கண்ணீர் எங்கிருந்து வருகிறது......
*****************************

மழையைக் கண்டு
மகிழும் பயிரைப் போல்
உன் புன்னகையைக் கண்டு
ஆயிரம் பூக்களை பூக்கிறது
என் இதயம்.........
********************

நான்
நினைப்பதெல்லாம்
நீ தூக்கத்தில் பேசுகிறாய்
ஆமடி,
நமக்குள் காதல் வராமல்
வேறென்ன.........
*******************

உன் முகத்திரை நீக்கி
ஓரக் கண்ணால்
இமை வெட்டிப் பார்த்தவளே
என் இதயத்தை வருடி விட்டுப் போறவளே
உனக்கும்,எனக்கும்
புரியாத பிரியம் வர
என்ன காரணம்..........
******************

பூப் பெய்திய
என் கனவுகளை
கசக்கி விட்டுப் போகும்
கண் மணி
என் உயிரையே பிடுங்கி விட்டுப் போகிறாய்...........
******************

மௌனம்
கற்றுத் தராத
உணர்வுகளையா.?
நமது
வார்த்தைகள் சொல்லப் போகிறது....
 ****************
     
      
ஏ.எம்.அஸ்கர்..

2 comments: