Monday, December 20, 2010

கழித்தல்...........

நேற்று,
என்னால் காதலிக்கப்பட்டது
இன்று வெறுக்கப்படுகிறது.

உன்னிடமிருந்து
ஒரு நேர்த்தியான கவிதைக்காய்,
தவமிருந்தேன்,
என் நேர்ச்சை பலிக்கக்கூடாது
என பின்னர் பிரார்த்தித்தேன்.

ஒரு பகற் பொழுதில்,
உன் தெருவால் நீ நடந்து போகின்ற போது
எத்தனை அழகு தேவதைகள்
உனக்காய் நடனமாடுகின்றன
உன்  அழகை வேட்டையாட
பல கழுகுகள் வட்டமிட்டன
அந்த கோர முகத்தோடு வந்த
கழுகுகளிடமிருந்து  உன்னை பாதுகாத்தது
ஞாபகமிருக்கிறதா..?
தன் நித்திரையை
ஒத்தி வைத்துவிட்டு
காவல்காக்கும் வயற்காரனைப் போல்
உன்னை யாராவது திருடிவிடக்கூடாது என்பதற்காய்
இரவு முழுவதும்
என்னை உனக்கு ஞாபகப்படுத்திக் கொண்டிருப்பேன்
காவல் காத்ததால்
நல்ல அறுவடை கிடைத்தது வயற்காரனுக்கு
ஆனால்,எனக்கோ கண்ணீர் கிடைத்தது..
இப்போது தூக்கம் தொலைத்த இரவுகள்
எனக்குள் வெட்கித்து தலை குனிகிறது....

பேசிப் பேசி...
வார்த்தைகள் பஞ்சமாகிப் போக
நமது உரையாடல்கள்
நின்று விடக்கூடாது என்பதற்காய்,
ஏதோ ஏதோவெல்லாம் உளரித்தள்ளியது
ஞாபகமிருக்கிறதா..?பின் செல்லத்தனமாய்
போபித்துக் கொண்டதை மறந்துவிட்டாயா..?

ஒவ்வொன்றாய்,
ரசித்து ருசித்து
எழுதிய கவிதையை
மீண்டும் மீண்டும்
வாசிப்பதைப்போல்,
எழுத்து பிழையோடு வரும்
உன் கடிதத்தை திருத்தி,திருத்தி வாசிப்பேன்
உன் எழுத்துப் பிழையைப்போல்
உன் ஞாபகம் எனக்குள் வதை செய்கிறது.......

இன்றிரவு
என் பெட்டியை சரி செய்கின்றபோது
நேற்று நான் பத்திரப்படுத்திய
சில குறிப்புக்களை கிழித்து வீசியதைப் போல்
உன் ஞாபகங்களையும்
அகற்ற வேண்டும்..அவசரமாய்..மிக அவசரமாய்....
நேற்று விரும்பப்பட்ட நீ
இன்று வெறுக்கப்படுகிறாய்.
வெறுக்கப் படும்பொழுது
என் மனசு வெறுமையாகிறது
என்ன செய்வது,
ஒரு சிக்கிரட்டின்
புகையை வெளியே தள்ளுவதைப்போல்
உன்னையையும் மறக்கவேண்டியிருக்கிறது......

2 comments: